22nd February 2021 14:00:02 Hours
உளவியல் பணிப்பகத்தின் அதிகாரிகளினால் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அலகுகளில் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு மனநலத்தை மேம்படுத்திக்கொள்வதற்கான இரு நாள் பயிற்சி பட்டறை பெப்ரவரி 18, 19 ஆம் திகதிகளில் நடத்தப்பட்டது.
உளவியல் பணிப்பகத்தின் லெப்டினன் கேணல் பீ.ஜி.எஸ்.சமந்தி, மேஜர் டி.பி.ஜி.கே.அல்விஸ் மற்றும் மேஜர் ஈ.ஏ.ஏ.எஸ். சமிந்த ஆகியோரால் நடத்தப்பட்ட இந்த பயிற்சிப்பட்டறை, இளைஞர்களின் உற்பத்தித் திறன் மற்றும் தேசத்திற்கான அர்ப்பணிப்பு,போர் இலக்கியம், அறிவு மற்றும் புரிதலுக்கும் இடையிலான பரஸ்பர தன்மை உள்ளிட்ட விடயப்பரப்புக்களை உள்ளடக்கியதாக நடத்தப்பட்டது. இந்த பயிற்சி பட்டறையில் 50 அதிகாரிகளும் 150 சிப்பாய்களும் பங்கேற்றனர். Best Authentic Sneakers | Womens Shoes Footwear & Shoes Online