23rd February 2021 19:40:55 Hours
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இருதரப்பு புரிதலையும் நட்பின் பிணைப்பையும் ஊக்குவிக்கும் வகையில், இலங்கைக்கு வருகைத் தந்துள்ள பாகிஸ்தான் கௌரவ பிரதமர் இம்ரான் கான் அவர்களுக்கு இன்று (23) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாக்கிஸ்தான் பிரதமருக்கு இலங்கை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கௌரவ வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், வெளியுறவு செயலாளர் அட்மிரல் (ஓய்வு) பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே, பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் உள்நாட்டு உயர் அதிகாரிகள் ஆகியோரால் வரவேற்கப்பட்டதுடன் கண்டிய நடனக் கலைஞர்களின் நடனங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
இதன் போது இராணுவ மரபுகளுக்கமைய அணிவகுப்பு மரியாதையுடன் பாகிஸ்தான் பிரதமருக்கு துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு கௌரவம் அளிக்கப்பட்டதுடன் இலங்கை கவசப் வாகனப் படைணியினரால் பிரதம விருந்தினருக்கு அணிவகுப்பு கௌரவம் வழங்கப்பட்டது. இதன்போது பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களும் இணைந்துக் கொண்டார்.
விமான நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாகிஸ்தானிற்கான உயர்ஸ்தானிகர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். latest Running | シューズ