22nd February 2021 18:25:21 Hours
பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இராணுவ நலன்புரி நிதியத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சாலிய பத்மசாந்த, தியதலாவை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தை திங்கட்கிழமை (22) மேற்பார்வை செய்திருந்ததுடன் படையினரு நலன்புரி வசதிகள் குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவு ஒன்றினையும் நிகழ்த்தினார்.
இந்த விரிவுரையின் போது இராணுவ வீரர்களுக்கு கிடைக்கக்கூடியவை நலன்புரி வசதிகள் பணுப்பகத்தின் மற்றும் பிற அரசு நிறுவனங்களிடமிருந்து பெறக்கூடிய பிற சலுகைகள் பற்றியும் விளக்கினார்.
மத்திய பாதுகாப்புப் படை தலைமையகம், பயிற்சிப் பாடசாலைகள் பிரிகேட் மற்றும் அலகுகளின் படையினர் இந்த அமர்வில் கலந்து கொண்டனர். மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜயபதிரண பார்வையாளராக பங்கேற்றனர். latest jordans | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival