போகஸ்வெவ பகுதியில் வன்னி படையினரால் மற்றொரு குடும்பத்திற்கு புதிய வீடு
நன்கொடையாளர் ஒருவரின் நிதியுதவியுடன் வன்னியில் நிலைக் கொண்டுள்ள 7 வது இலங்கை சிங்கப் படையினர் போகஸ்வெவ பிரதேசத்தில் இரண்டு மாற்றுத் திறனாளி பிள்ளைகளுடன் வாழும் ஏழைக் குடும்பத்திற்கு நிர்மாணிக்கப்படவிருக்கும் வீட்டிற்கான அடிக்கல்லினை புதன்கிழமை (17 ) நாட்டிவைத்தனர்.
வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டாரவின் வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பில் திருமதி ஜே.எம்.எஸ்.ஜயலத்துக்கும் அவரது இரண்டு ஊனமுற்ற குழந்தைகளுக்குமான வீடு கட்டுவதற்கான மூலப்பொருட்கள் கொழும்பு ஆட்டோ மொபைல் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் திரு. பி.பி. குலதுங்க அவர்களால் வழங்கப்படுகின்றன.
சுருக்கமான அடிக்கல் நாட்டு விழா 56வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் அடிக்கல் நாட்டினார். 561 வது பிரிகேட் தளபதி , 563 வது பிரிகேட்டின் சிரேஸ்ட அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் போகஸ்வெவ கிராம மக்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்
Sport media | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5