20th February 2021 10:30:15 Hours
இன்று (22) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 519 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் ஏனைய 518 பேர் உள் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 122 பேர் கொழும்பு மாவட்டம், 85 பேர் கண்டி மாவட்டம், 64 பேர் கம்பஹா மாவட்டம், ஏனைய மாவட்டங்களில் 247 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி (22) ஆம் திகதி காலை வரை நாடு முழுவதிலும் மரணித்தவர்கள் உட்பட மொத்தமாக 79,998 தொற்றுள்ளவர்கள் இணங்கானப்படுள்ளதுடன் அவர்களில் 76,428 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி மற்றும் மினுவான்கொடை பிரெண்டெக்ஸ் ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்களாவர். 74,298 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 5,255 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 843 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றுக்கு இலக்கான 10 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் குடாகல்கமுவ, வஸகடுவ, களுத்தூறை, பிபில, பிட்டக்கோட்டை, ரத்மலான, ஹட்டன், குருத்தலாவ, கொலன்னாவ மற்றும் வெள்ளவத்தை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதன்படி (22) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 445 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், (22) காலை நிலவரப்படி முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 96 தனிமைப்படுத்தல் மையங்களில் 9,373 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (21) 12,936 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Nike Sneakers | Air Jordan