17th February 2021 20:20:22 Hours
இன்று (19) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 514 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அவர்களில் 13 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஏனைய 501 பேர் உள் நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் 105 பேர் கொழும்பு மாவட்டம், 68 பேர் கம்பஹா மாவட்டம், 68 பேர் கண்டி மாவட்டம்,ஏனைய மாவட்டங்களில் 260 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி (19) ஆம் திகதி காலை வரை நாடு முழுவதிலும் மொத்தமாக மரணித்தவர்கள் உட்பட 78,419 தொற்றுள்ளவர்கள் இணங்கானப்படுள்ளதுடன் அவர்களில் 74,876 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி மற்றும் மினுவான்கொடை பிரெண்டெக்ஸ் ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்களாவர். 71,822 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 6,167 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 647 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றுக்கு இலக்கான 08 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் வத்தளை ,தெமட்டகொடை, வாழைத்தோட்டம், மீகொடை ,ரிதிமாலியத்தை, கொழும்பு 08 ,கொழும்பு 10 மற்றும் தெகடான ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதன்படி (19) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்தஎண்ணிக்கை 430 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், (19) காலை நிலவரப்படி முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 93 தனிமைப்படுத்தல் மையங்களில் 9,268 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (18) 15,386 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. short url link | Nike Running