15th February 2021 08:58:22 Hours
இன்று (16) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 774 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் உள்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 208 பேர் கம்பஹா மாவட்டம் , 179 பேர் கொழும்பு மாவட்டம், 82 பேர் இரத்னபுரி மாவட்டம் மற்றும் 305 பேர் ஏனைய மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி (16) காலை வரை நாடு முழுவதிலும் மொத்தமாக மரணித்தவர்கள் உட்பட 76,427 தொற்றுள்ளவர்கள் அறியப்பட்டிருப்பதுடன் அவர்களில் 72,906 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். 69,410 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 6,614 வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
டந்த 24 மணி நேரத்திற்குள் 715 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றுக்கு இலக்கான 06 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் திவுலன்கடவல, பஹல தலவின்ன, நுகேகொட, வத்தளை, ஹுன்னஸ்கிரிய மற்றும் ஹங்வெல்ல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதன்படி (16) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 403 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், (16) காலை நிலவரப்படி முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 92 தனிமைப்படுத்தல் மையங்களில் 9,152 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் நேற்று (15) 15,430 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. Authentic Nike Sneakers | adidas poccnr jumper dress pants size