Header

Sri Lanka Army

Defender of the Nation

14th February 2021 10:21:14 Hours

மேலும் 802 பேருக்கு தொற்று உறுதி-நொப்கோ தெரிவிப்பு

இன்று (15) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 802 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அவர்கள் அனைவரும் உள்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 238 பேர் கொழும்புமாவட்டம்,162 பேர் கம்பஹா மாவட்டம்,68 பேர் களுத்துறை மாவட்டம்,ஏனைய மாவட்டங்களில் 333பேர் அடையாளம்காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம்அறிவித்துள்ளது.

அதன்படி (15) காலை வரை நாடு முழுவதிலும் மொத்தமாகமரணித்தவர்கள் உட்பட 75,653 தொற்றுள்ளவர்கள் அறியப்பட்டிருப்பதுடன்அவர்களில் 72,132 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி மற்றும் மினுவான்கொடை ஆடைதொழிற்சாலையில்தொடர்புடையவர்களாவர். 68,695 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்துவெளியேறியுள்ளனர். மேலும் 6,631 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்புமையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 865பேர் முழுமையாகசுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்துவெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றுக்குஇலக்கான 07மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் யாழ்பாணம், பேராதெனிய, மகாவெல, குருனாகல், கம்பொல, அங்கொட மற்றும் கொத்தட்டுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள்ஆவர். அதன்படி (15) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்தஎண்ணிக்கை 397 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், (15) காலை நிலவரப்படி முப்படையினரால்நிர்வகிக்கப்படும் 92 தனிமைப்படுத்தல் மையங்களில் 9,089பேர் தொடர்ந்தும்தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (14) 16,866 பி.சி.ஆர் பரிசோதனைகள்நடத்தப்பட்டன. latest jordan Sneakers | Nike Off-White