Header

Sri Lanka Army

Defender of the Nation

06th February 2021 03:00:25 Hours

8,027 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்

இன்று (08) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 772 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சகலரும் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 245 பேர், கம்பஹா மாவட்டத்தில் பேர் 214 பேர், இரத்தினபுரியில் 53 மற்றும் ஏனைய மாவட்டங்களில் 260 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது

அதன்படி (08) காலை வரை நாடு முழுவதிலும் மொத்தமாக 69,347 தொற்றுள்ளவர்கள் அறியப்பட்டிருப்பதுடன் அவர்களில் 65,352 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொர்புபட்டவர்களாவர். 63,400 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 5,591 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 807 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றுக்கு இலக்கான 05 மரணங்கள் பதிவாகியுள்ளன. கொழும்பு 15, வெளிமடை, வக்வெல்ல, பமுனுகம மற்றும் தும்முள்ளசூரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்திருந்ததுள்ளனர். அதன்படி (08) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 356 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், (08) காலை நிலவரப்படி, முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 91 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 8,027 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் நேற்று (07) 15,746 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. buy footwear | Nike Air Max 270