04th February 2021 06:38:42 Hours
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும், கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் கட்டளைக்கமைய, 53 வது படைப்பிரிவு தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களின் வழிகாட்டலுக்கமைய, அப்படைத் தலைமையகத்தினால், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குத் திரும்பி வருபவர்களுக்காக, தம்புள்ளை ஹபரன பிரதான வீதியின் ஹிப்பன்கட்டுவ பகுதியில் ‘’பயணிகள் மாற்று நிலையம்’ அமைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தனிமைப்படுத்தல் செயல்பாடுகளுக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
குறித்த நிலையம் புதன்கிழமை 3 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது.அதன்படி, தனிமைப்படுத்தல் நோக்கங்களுக்காக அழைத்துவரப்படும் வெளிநாட்டவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு செல்லும் வழியில் உள்ள குறித்த நிலையத்தில் அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப சுகாதார வசதிகள், விருந்தோம்பல் மற்றும் ஏனைய தேவைகளைக் பெற்றுக்கொள்ளலாம். Sports Shoes | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat