01st February 2021 17:15:02 Hours
இன்று (03) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 715 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 261 பேர், கம்பஹா மாவட்டத்தில் 142 பேர், பதுளை மாவட்டத்தில் 61 பேர் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 251 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி (03) காலை வரை நாடு முழுவதிலும் மொத்தமாக 65,697 தொற்றுள்ளவர்கள் அறியப்பட்டிருப்பதுடன் அவர்களில் 59,042 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புபட்டவர்களாவர். 59,042 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 6,325 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 968 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றுக்கு இலக்கான 07 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் வெளிகம, கொழும்பு 15 ,கொழும்பு 02, வத்தேகம, நிட்டம்புவ, கெலிஓயா, மற்றும் இராகம பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்திருந்ததுள்ளனர்.
அதன்படி (03) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 330 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், (03) காலை நிலவரப்படி, முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 93 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 7,406 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று வரை (02) 12,340 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. Running sports | Women's Designer Sneakers - Luxury Shopping