Header

Sri Lanka Army

Defender of the Nation

01st February 2021 16:10:34 Hours

மரணித்தவர்களின் எண்ணிக்கை 323 ஆக உயர்வு

இன்று (02) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 826 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 10 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் ஏனையவர்கள் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 212 ஆகும்.

அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் 212 பேர், கண்டி மாவட்டத்தில் 131 பேர் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 341 பேர் ஆவர் என கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி (02) காலை வரை நாடு முழுவதிலும் மரணித்தவர்கள் உட்பட மொத்தமாக 64,982 தொற்றுள்ளவர்கள் அறியப்பட்டிருப்பதுடன் அவர்களில் 60,995 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புபட்டவர்களாவர். 58,074 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 6,585 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 916 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றுக்கு இலக்கான 07 மரணங்கள் பதிவாகியிருந்ததுடன் அவர்கள் வத்தளை, பொலன்னறுவை, கொழும்பு 02, உடுகம்பளை, நுகேகொட, மடவளை மற்றும் கெலிஓ பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்திருந்ததுள்ளனர். அதன்படி (02) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 323 ஆக உயர்வடைந்துள்ளது. Nike air jordan Sneakers | Womens Shoes Footwear & Shoes Online