Header

Sri Lanka Army

Defender of the Nation

01st February 2021 14:05:34 Hours

7,444 பேர் தொடர்ந்தும் 98 நிலையங்களில் தனிமைப்படுத்தபட்டுள்ளனர்

இன்று (01) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 864 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 27 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் ஏனையவர்கள் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். இவர்களில் அதிகளவாக கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 306 ஆகும். அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் 88 பேர், கண்டி மாவட்டத்தில் 81 பேர் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 306 பேர் ஆவர் என கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி (01) காலை வரை நாடு முழுவதிலும் மரணித்தவர்கள் உட்பட மொத்தமாக 64,156 தொற்றுள்ளவர்கள் அறியப்பட்டிருப்பதுடன் அவர்களில் 60,179 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புபட்டவர்களாவர். 57,158 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 6,682 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 882 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றுக்கு இலக்கான 03 மரணங்கள் பதிவாகியிருந்ததுடன் அவர்கள் கொழும்பு 08, கடுவலை, அங்குறுவத்தொட, பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்திருந்ததுள்ளனர். அதன்படி (30) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 308 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், (29) நிலவரப்படி, முப்படையினரினால் நிர்வகிக்கப்படும் 98 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 7,444 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (29) 15,628 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. latest Running Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ