Header

Sri Lanka Army

Defender of the Nation

28th January 2021 15:00:49 Hours

கடந்த 24 மணித்தியாலங்களில் 963 பேருக்கு தொற்று உறுதி

இன்று (30) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 859 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் சகலரும் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். இவர்களில் அதிகளவாக கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 313 ஆகும். அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் 211 பேர், களுத்துறை மாவட்டத்தில் 79 பேர் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 256 பேர் ஆவர் என கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி (30) காலை வரை நாடு முழுவதிலும் மரணித்தவர்கள் உட்பட மொத்தமாக 62,444 தொற்றுள்ளவர்கள் அறியப்பட்டிருப்பதுடன் அவர்களில் 55408 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புபட்டவர்களாவர். 55397 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 6,742 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமிரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 963 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றுக்கு இலக்கான 8 மரணங்கள் பதிவாகியிருந்ததுடன், களுத்துறை ,கொலன்னாவை, கொழும்பு, பாணந்துறை, காலி, இரத்தினபுரி, மொறட்டுவ, பிலியந்தல மற்றும் சாய்ந்தமருது பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்திருந்ததுள்ளனர்.

அதன்படி இன்று (30) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களிள் மொத்த எண்ணிக்கை 305 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், இன்று காலை (30) நிலவரப்படி, முப்படையினரினால் நிர்வகிக்கப்படும் 99 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 8,117 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (29) 18,132 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. Buy Kicks | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos