22nd January 2021 08:03:24 Hours
இன்று (23) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 787 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 3 பேர் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் ஏனைய 784 பேர் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்களாவர்.இவர்களில் அதிகளவாக கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 139 ஆகும். அதேநேரம் கண்டி மாவட்டத்தில் 108 பேர், கொழும்பு மாவட்டத்தில் 101 பேர் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த 436 பேருக்கும் கொவிட;-19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று 23 ஆம் திகதி காலை வரை நாடு முழுவதிலும் மரணித்தவர்கள் உட்பட மொத்தமாக 56,862 தொற்றுள்ளவர்கள் அறியப்பட்டிருப்பதுடன் அவர்களில் குணமடைந்துள்ள 48, 616 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 7,968 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றுக்கு இலக்கான இரு மரணங்கள் பதிவாகியிருந்ததுடன்,கொழும்பு,ஹோமாகம பிரதேசங்களை சேர்ந்தவர்களே உயிரிழந்திருந்ததுனர். அதன்படி இன்று காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களிள் மொத்த எண்ணிக்கை 278 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் இன்று (23) காலை 633 நோயளிகள் முழுமையாக குணமடைந்து வைத்தியசலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
மேலும் இன்று காலை (23) நிலவரப்படி, முப்படையினரின் கீழ் முகாமைத்துவம் செய்யப்படுகின்ற 90 தனிமைப்படுத்தல் மையங்களில் 8141 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (22) 19,285 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. latest Running | Nike for Men