19th January 2021 13:30:04 Hours
2021 ஜனவரி மாதம் 14ம் திகதி ஆலங்குளம் பகுதியில் பயணித்து கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்றில் ஏற்பட்ட தீ வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 651 வது பிரிகேட்டின் 17 வது (தொண்டர்) இலேசாயுத காலாட் படை படையினரால் சில மணி நேரங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திசாநாயக்கவின் கட்டளைப்படி 651 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த பண்டாரவின் மேற்பார்வையின் கீழ், ஆலங்குலம் பகுதிக்கு விரைந்த படையினர் தீப்பரவலை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
தீப் பற்றிக்கொண்ட நேரத்தில் பேரூந்துக்குள் சாரதி மற்றும் நடத்துனரைத் தவிர வேறு எந்த பயணிகளும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Best Authentic Sneakers | Zapatillas de running Nike - Mujer