17th January 2021 12:23:19 Hours
வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா விரைவில் யாழ் பாதுகாப்புப் படை தலைமையக தளபதியாக பொறுப்பேற்பதற்காக தனது கடமைகளை வெள்ளிக்கிழமை (15) கைவிட்டார்.
மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் 21 வது தளபதியாக இருந்தார். வன்னியின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரியாவிடை விழாவில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை என்பன வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழுள்ள படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் பணி நிலை அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். Sport media | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp