08th January 2021 14:34:11 Hours
சமிஞசைப் படைத் தளபதியும் இராணுவ பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் பிரபாத் தேமடன்பிட்டிய பாதுக்க 5 வது இலங்கை சமிஞ்சை படைக்கு திங்கள்கிழமை (04) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
படைத் தளபதிக்கு 5 வது இலங்கை சமிஞ்சை படை படையினர் பிரதான நுழைவாயிலில் மரியாதை செய்ததுடன் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் டி எம் ஐ எஸ் பண்டார வரவேற்றார்.
மரக் கன்று நாட்டல் மற்றும் குழுப் படம் எடுத்தல் ஆகியவற்றில் கலந்துக் கொண்ட அவர் அனைத்து நிலைகளுக்குமான உரையில் சமிஞ்சைப் படையின் எதிர்கால வளர்ச்சிக்கான தனது தொடர்பாக வலியுறுத்தினார். பின்னர், கட்டளை அதிகாரி அன்றைய தினத்தின் அடையாளமாக ஒரு நினைவு பரிசு வழங்கினார்.
இறுதியாக, அன்றைய பிரதம விருந்தினர் அனைத்து அதிகாரிகளுடனும் மதிய உணவுக்காக அதிகாரிகள் உணவகத்தில் கலந்துக் கொண்டார். பின்னர் விருந்தினர் பதிவு புத்தகத்தில் பதிவிட்டார்.
இந்த விஜயத்தின் போது நிலையத் தளபதி கேர்ணல் அசோக குணசேகர மற்றும் இலங்கை சமிஞ்சை படையின் பிரதி நிலையத் தளபதி கர்ணல் திலாந்த பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர். bridgemedia | Nike Releases, Launch Links & Raffles