15th January 2021 17:20:05 Hours
இன்று (17) காலை வரையில் இலங்கையில் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 719 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கையர் 04 பேர் ஆவர். ஏனைய 715 பேர் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 182 பேர், கொழும்பு மாவட்டம் 152 பேர், கண்டி மாவட்டம் 75 பேர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய 306 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர் என கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் மையம் தெரிவிக்கின்றது.
இன்று (17) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 48,503 பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 41,988 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059 (சகலரும் சுகடைந்துள்ளனர்) கொழும்பு மீன் சந்தை கொத்தணி 38,929
அதன் பிரகாரம் 17 ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 52,312 ஆகும். அவர்களில் 44,745 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்று (17) வரை 7,311 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை (17) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 487 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்று காலை (17) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக மரணம் ஒன்று பதிவாகியுள்ளதுடன், அவர், எத்துல்கோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவர். அதற்கமைய இன்று காலை (17) வரையான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 256 ஆகும்.
இன்று (17) காலை மாலைத்தீவில் இருந்து UL 104 விமான ஊடாக 23 பயணிகளும் கட்டாரில் இருந்து QR 668 விமான ஊடாக 36 பயணிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து UL 232 விமான ஊடாக 79 பயணிகளும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து UL 226 விமான ஊடாக 290 பயணிகளும், அவுஸ்ரேலியாவில் இருந்து UL 605 விமானம் ஊடாக 29 பயணிகளும், ஜபானில் இருந்து UL 455 விமானம் ஊடாக 46 பயணிகள் வருகை தந்துள்ளனர். அதேபோல் (17) ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து EK 650 விமானம் மூலம் 70 பயணிகள், இந்துநேசியவில் இருந்து UL 1365 விமானம் மூலம் 09 பயணிகள், மாலைத்தீவில் இருந்து UL 102 விமானம் மூலம் 05 பயணிகளும், மாலைத்தீவில் இருந்து UL 506 விமானம் மூலம் 05 பயணிகளும், சிங்கபூரில் இருந்து UL 303 விமானம் மூலம் 08 பயணிகளும், சிங்கபூரில் இருந்து SQ 468 விமானம் மூலம் 64 பயணிகள் இலங்கை வருகை தரவுள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று காலை (17) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 83 தனிமைப்படுத்தல் மையங்களில் 7,131 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று (16) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 13,681 ஆகும். Best jordan Sneakers | nike air force 1 shadow , eBay