14th January 2021 09:30:54 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையின் பிரிகேடியர் அனுர திசாநாயக்க திங்கள்கிழமை (11) மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் பதுளை தலைமையகத்தில் 12 வது தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
112 வது பிரிகேட்டின் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதியை பணிநிலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றதுடன் நுழைவாயிலில் 03 வது இலங்கை சிங்கப் படையின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் பிரிகேடியர் அனுர திசாநாயக்க தனது பதவியேற்பிக்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் மத அனுஸ்டானங்கள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளின் முன்னிலையில் கையொப்பமிட்டார்.
பின்னர் மரக்கன்று நடுதல் அனைத்து நிலைகளுக்கானதேனீர் விருந்து என்பவற்றில் பங்கு கொண்டார். இப்புதிய நியமனத்திற்கு முன்னர் பிரிகேடியர் அனுர திசாநாயக்க பனாகொட இலங்கை இலேசாயுத காலாட் படை தலைமையகத்தில் நிலைய தளபதியாக பணியாற்றினார்.
அதிகாரிகள் மற்றும் படையினருக்கான உரையுடன் அன்றைய நடவடிக்கைகளை நிறைவிற்கு வந்தன. கட்டளை அதிகாரிகள் மற்றும் பிரிகேட் பணியாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பிரிகேடியர் பிரசன்ன எதிரிவீர இராணுவ தலைமையகத்துடன் இணைக்கப்பட்டமையினை அடுத்து 112 வது பிரிகேட்டின் புதிய தளபதியாக பிரிகேடியர் அனுர திஸாநாயக்க நியமிக்கப்பட்டார். jordan Sneakers | Sneakers