Header

Sri Lanka Army

Defender of the Nation

15th January 2021 17:40:05 Hours

இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே அவர்கள் பதவியேற்பு

இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் 19 வது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே அவர்கள் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி தலைமையகத்தில் வைத்து தனது கடமையை வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் 14 வது படைப் பிரிவின் படைத் தளபதியுமாவார்.

அங்கு வருகையினை மேற்கொண்ட படையணியின் படைத் தளபதிக்கு நுழைவாயிலில் இராணுவ மரியாதை அளிக்கப்பட்டதோடு படையணியின் நிலையத் தளபதிய பிரிகேடியர் கேஎம் திலகரத்ன அவர்களினால் வரவேற்கப்பட்டார். பின்னர் அவர் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் உயிர் நீத்த படைவீர்ர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் அவருக்கு படையணி அணிவகுப்பு மைதானத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் படையணி வளாகத்தில் மரக்கன்றினை நட்டார். பின்னர் அவர் படையணி கேட்போர்கூடத்தில் படையினர் மத்தியில் உரையாற்றினார்.

நிலையத் தளபதி, படையணி பதவி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையணி ஊழியர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.மேலும் அங்கு அனைத்து படையினருக்குமான தேநீர் விருந்துபசார நிகழ்வும் இடம்பெற்றது. Running sports | NIKE