10th January 2021 17:00:47 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் துனுகாயில் உள்ள 65 பிரிவு தலைமையகத்திற்கும் அதன் கீழ் கட்டளை படைப்பிரிவுகள் மற்றும் பட்டாலியன்களுக்கும் சனிக்கிழமை (09) விஜயத்தை மேற்கொண்டார்.
வருகையினை மேற்கொண்ட தளபதியை 65 வது படைப் பிரிவில் இராணுவ மரியாதையளிக்கப்பட்டதோடு அவர் 65 வது படைப் பிரிவு தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திசானநாயக்க அவர்களின் வேண்டுகொளிற்கமைய படைப் பிரிவுத் தலைமையகத்தில் மரக்கன்றினை நட்டார். அதன்பிறகு 65 வது படைப் பிரிவின் பங்கு மற்றும் பணிகள் குறித்த விளக்கத்தை படைப் பிரிவின் படைத் தளபதி வன்னி பாதுகாப்பு படைத் தளபதிக்கு அளித்த்தோடு, படையினர் மத்தியில் உரையாற்றிய தளபதி 651 வது பிரிகேட் படைப் பிரிவின் தலைமையகம், பட்டாலியன் பயிற்சி பாடசாலை மற்றும் 19 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகிய இடங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
குறித்த நிகழ்வில் 65 வது படைப் பிரிவின் படைத் தளபதி ,அனைத்து பிரிகேட் தளபதிகள், 65 வது படைப் பிரிவின் சிரேஷ்ட பதவி நிலை அதிகாரிகள் மற்றும் பட்டாலியன் தளபதிகள் கலந்து கொண்டனர். Sneakers Store | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ