08th January 2021 17:00:36 Hours
இன்று (10) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் -19 தொற்றாளர்கள் 535 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். அவர்களில் 148 பேர் கொழும்பு மாவட்டம், 111 பேர் கண்டி மாவட்டம், 64 பேர் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஏனைய 212 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (10) காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 44060 பேர் ஆகும். அதேவேளை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி (3,059) மற்றும் மீன் சந்தை கொத்தணியில் (35021) இருந்து மொத்தமாக 38080 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதன் பிரகாரம் (10) ஆம் திகதி வரை மரணித்தவர்கள் உட்பட மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 47839 ஆகும். அவர்களில் 40837 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 6773 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை (10) கடந்த 24 மணி நேரத்திற்குள் முழுமையாக சுகமடைந்த 521 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 04 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் கல்கிஸ்சை ,ஒபெநாயக்க,காத்தான்குடி மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். அந்த வகையில் இன்று காலை(10) ம் திகதி வரையான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 229 ஆகும்.
இன்று காலை (10) மாலைதீவில் இருந்து UL 104 விமானம் ஊடாக 24 பயணிகளும் கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 45 பயணிகளும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து UL 226 விமானம் ஊடாக 68 பயணிகளும் அவுஸ்திரேலியாவில் இருந்து UL 607 விமானம் ஊடாக 8 பயணிகளும் ஜப்பானில் UL 455 விமானம் ஊடாக 50 பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து EK 650 விமானம் ஊடாக 70 பயணிகளும் இந்தியாவில் இருந்து IFC 121 விமானம் ஊடாக 14 பயணிகளும் இந்தியாவில் இருந்து AI 273 விமானம் ஊடாக 58 பயணிகளும் மாலைதீவில் இருந்து UL 506 விமானம் ஊடாக 12 பயணிகளும் மாலைதீவில் இருந்து UL 102 விமானம் ஊடாக 4 பயணிகளும் இத்தாலியில் இருந்து UL 1208 விமானம் ஊடாக 33 பயணிகளும் துருக்கியில் இருந்து TK 730 விமானம் ஊடாக 10 பயணிகளும் சிங்கப்பூரில் இருந்து UL 303 விமானம் ஊடாக 17 பயணிகளும் மற்றும் சிங்கப்பூரில் இருந்து SQ 668 விமானம் ஊடாக 50 பயணிகளும் இன்று வருகைதரவுள்ளனர். வருகை தந்த அவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை (10) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 76 தனிமைப்படுத்தல் மையங்களில் 6150 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (9) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 17217 ஆகும். latest Running | Air Jordan Release Dates 2020