10th January 2021 16:22:47 Hours
அனுராதபுரத்தில் இராணுவ சிப்பாயினருக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'துரு அரண' விடுமுறை விடுதி மற்றும் 3 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சார்ஜென்ட் மேஜர்ஸ் விடுதி ஆகியன 3 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஏ.விஜேகோண் அவர்களின் அழைப்பின் பேரில் வட மத்திய முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச படைத் தளபதியும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால் அவர்களினால் சனிக்கிழமை (9) திறந்து வைக்கப்பட்டன.
அங்கு வருகை தந்த படையணித் தளபதியை கட்டளை அதிகாரி வரவேற்றார். பின்னர் இராணுவச் சிப்பாயினரின் விடுதி மற்றும் சார்ஜென்ட் மேஜர்ஸ் விடுதி ஆகியவை நல்ல நிமிடத்தில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டன. பின்னர், அவர் இராணுவ பொலிஸ் படையின் கடமைகள், விசாரணைகள், ஒழுக்கம் மற்றும் நிர்வாகத்திற்கான அவரது கருத்துக்களை குறிப்பிட்டு உரையாற்றினார்.
முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச பதவி நிலை அதிகாரி I லெப்டினன் கேணல் எம்.எம்.எம்.பி மகேஷ் குமார, 4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஆர்.ஆர்.பி பெரேரா மற்றும் 5 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பி.டி.ஐ பெரேரா மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர். Sports News | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5