Header

Sri Lanka Army

Defender of the Nation

27th December 2020 11:00:11 Hours

சுகமடைந்த 650 பேர்வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் வெளியேற்றம்

இன்று (28) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 674 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 06 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். மற்றைய அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 174 பேர் கொழும்பு மாவட்டம், 174 பேர் களுத்துறை மாவட்டம், 110 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏனைய 231 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர்.

இன்று (28) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 37,338 பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 29,943 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059 (சகலரும் சுகடைந்துள்ளனர்) கொழும்பு மீன் சந்தை கொத்தணி 34,279

அதன் பிரகாரம் (28) ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,053 ஆகும். அவர்களில் 32,700 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்று (28) ஆம் திகதி வரை 8,162 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (28) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 650 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று காலை (28) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 04 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் கடவத்தை, பிட்டக்கோட்டே, ராகம மற்றும் வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள். அந்த வகையில் இன்று காலை (28) வரையான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 191 ஆகும்.

இன்று (28) காலை கட்டாரில் இருந்து QR 668 விமான ஊடாக 16 பயணிகளும் சவுதி அரேபியாவில் இருந்து UL 1264 விமானம் ஊடாக 02 பயணிகளும் இந்தியாவில் இருந்து 6E 903 விமானம் ஊடாக 18 பயணிகளும் வருகை தந்துள்ளனர். இன்று (28) மாலைத்தீவுகளில் இருந்து UL 102 விமானம் ஊடாக 05 பயணிகளும் ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் இருந்து PQ 555 விமானம் ஊடாக 150 பயணிகளும் பாகிஸ்தானில் இருந்து UL 186 விமானம் ஊடாக 04 பயணிகளும் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று காலை (28) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 74 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,595 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று டிசம்பர் (27) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை ண 11,060 ஆகும். Asics footwear | Nike News