26th December 2020 12:10:11 Hours
இன்று (27) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 598 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 05 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். மற்றைய அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 235 பேர் கொழும்பு மாவட்டம், 84 பேர் களுத்துறை மாவட்டம், 164 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏனைய 110 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர்.
இன்று (27) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 36,670 பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 28,643 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059 (சகலரும் சுகடைந்துள்ளனர்) கொழும்பு மீன் சந்தை கொத்தணி 33,611
அதன் பிரகாரம் (27) ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,379 ஆகும். அவர்களில் 32,050 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்று (27) ஆம் திகதி வரை 8,142 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை (27) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 712 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்று காலை (27) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 01 மரணம் பதிவாகியுள்ளது. அவர் கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்தவர். அந்த வகையில் இன்று காலை (27) வரையான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 187 ஆகும்.
இன்று (26) காலை மலைத்தீவுகளில் இருந்து UL 104 விமான ஊடாக 01 பயணியும் கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 130 பயணிகளும் அவுஸ்திரேலியாவில் இருந்து UL 607 விமானம் ஊடாக 68 பயணிகளும் ஜப்பானில் இருந்து UL 455 விமானம் ஊடாக 74 பயணிகளும் ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் இருந்து UL 226 விமானம் ஊடாக 53 பயணிகளும் ஜோர்தானில் இருந்து UL 554 விமானம் ஊடாக 200 பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
இன்று (27) டூபாயில் இருந்து EK 650 விமானம் ஊடாக 45 பயணிகளும் இத்தாலியில் இருந்து UL 1208 விமானம் ஊடாக 07 பயணிகளும் துருக்கியில் இருந்து TK 730 விமானம் ஊடாக 15 பயணிகளும் சிங்கப்பூரில் இருந்து SQ 468 விமானம் ஊடாக 08 பயணிகளும் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று காலை (27) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 73 தனிமைப்படுத்தல் மையங்களில் 5,791 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று டிசம்பர் (26) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை ண 13,516 ஆகும். Running sport media | Nike Shoes