Header

Sri Lanka Army

Defender of the Nation

24th December 2020 22:10:20 Hours

முப்படையினரின் 76 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,457 பேர் தனிமைப்படுத்தலில்

இன்று (25) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 592 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 04 வெளிநாட்டில் இருந்து வந்தவர் அவர்களில் ஒருவர் வெளிநாட்டவர் ஏனைய அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 245 பேர் கொழும்பு மாவட்டம், 140 பேர் களுத்துறை மாவட்டம், 66 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏனைய 137 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர்.

இன்று (25) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 35,526 பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 27,160 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059 கொழும்பு மீன் சந்தை கொத்தணி 32,467

அதன் பிரகாரம் (25) ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,230 ஆகும். அவர்களில் 30,567 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்று (25) ஆம் திகதி வரை 8,478 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (25) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 686 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்று காலை (25) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 01 மரணம் பதிவாகியுள்ளது. அவர் களுத்துறை தெற்கு பிரதேசத்தை சேர்ந்தவர். அந்த வகையில் இன்று காலை (25) வரையான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 185 ஆகும்.

இன்று (25) காலை கட்டாரில் இருந்து QR 668 விமான ஊடாக 21 பயணிகளும் அவுஸ்தரேலியாவில் இருந்து UL 607 விமானம் ஊடாக 70 பயணிகளும் ஜப்பானில் இருந்து UL 455 விமானம் ஊடாக 07 பயணிகளும் அவுஸ்தரேலியாவில் இருந்து UL 605 விமானம் ஊடாக 123 பயணிகளும் வருகை தந்துள்ளனர். இன்று (25) ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் இருந்து UL 226 விமானம் ஊடாக 287 பயணிகளும் மலைத்தீவுகளில் இருந்து UL 102 விமானம் ஊடாக 01 பயணியும் இத்தாலியில் இருந்து UL 1208 விமானம் ஊடாக 27 பயணிகளும் மலேசியாவில் இருந்து UL 320 விமானம் ஊடாக 12 பயணிகளும் சீனாவில் இருந்து MU 231 விமானம் ஊடாக 77 பயணிகளும் சிங்கப்பூரில் இருந்து SQ 468 விமானம் ஊடாக 11 பயணிகளும் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று காலை (25) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 76 தனிமைப்படுத்தல் மையங்களில் 6,457 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று டிசம்பர் (24) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை ண 13,853 ஆகும். short url link | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp