17th December 2020 19:19:18 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 21வது படைப்பிரிவின் 212 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒருவரின் பண நன்கொடையில் மூன்று பிள்ளைகளுடன் உதவியற்ற தாய்க்கு ரூ .20,000 மதிப்புள்ள உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
தம்பியாவ தந்திரிமலையில் 8, 4 வயது மற்றும் 2 மாத பிள்ளையுடன் உதவியற்று உணவுக்காக பிச்சை எடுத்து வாழும் நிலையை அவதானித்த 212 வது பிரிகேட்டின் தளபதி திருமதி ஐ.எஸ்.எம். விக்ரமசிங்க அவர்களுக்கு உதவியினை செய்தார்.
வன்னி பாதுகாப்பு படை தலைமைக தளபதி மற்றும் 21வது படைப்பிரிவு தளபதி ஆகியோரின் ஆசியுடன் 212 வது பிரிகேட் தளபதியின் தனிப்பட்ட தொடர்பு மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள திரு டமித் கஹாவே இந்த பண நன்கொடையினை வழங்கினார்.
இந்த நன்கொடை சில நாட்களுக்கு முன்பு 212 வது பிரிகேட்டின் தளபதியால் தனிப்பட்ட முறையில் 212 வது பிரிகேட்டின் சிரேஸ்ட அதிகாரிகள், 5 இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் கட்டளை அதிகாரி மற்றும் பயனாளி குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் குறுத்த தாய்க்கு வழங்கப்பட்டது. jordan Sneakers | Men’s shoes