18th December 2020 12:46:44 Hours
இன்று (18) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 650 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 242 பேர் கொழும்பு மாவட்டம், 42 பேர் கண்டி மாவட்டம், 126 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏனைய 240 பேர் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டவர்கள் ஆவர் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம்தெரிவிக்கின்றது.
இன்று (18) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 31,716 பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 22,945 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059 கொழும்பு மீன் சந்தை கொத்தணி 28,657
அதன் பிரகாரம் (17) ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 35,386 ஆகும். அவர்களில் 26,352 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று (17) ஆம் திகதி வரை 8,874 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை (18) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 701 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்று காலை (18) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக மரணங்கள் பதிவாகவில்லை.
இன்று (18) காலை கட்டாரில் இருந்து QR 668 விமான ஊடாக 23 பயணிகளும் ஜப்பானில் இருந்து UL 455 விமானம் ஊடாக 42 பயணிகளும் கட்டாரில் இருந்து QR 7110 விமான ஊடாக 140 பயணிகளும் வருகை தந்துள்ளனர். மேலும் இன்று (18) கட்டாரில் இருந்து QR 664 விமானம் ஊடாக 75 பயணிகளும் ஜெர்மனியில் இருந்து UL 554 விமான ஊடாக 37 பயணிகளும் இத்தாலியில் இருந்து UL 190 விமான ஊடாக 144 பயணிகளும் பங்காளதேஷில் இருந்து UL 554 விமான ஊடாக 24 பயணிகளும் ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் இருந்து UL 198 விமான ஊடாக 01 பயணியும் துருக்கியில் இருந்து TK 730 விமான ஊடாக 20 பயணிகளும் மாலைத்தீவில் இருந்து UL 320 விமான ஊடாக 13 பயணிகளும் சீனாவில் இருந்து MU 231 விமான ஊடாக 74 பயணிகளும் ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் இருந்து EK 648 விமான ஊடாக 100 பயணிகளும் நிவுஸிலாந்தில் இருந்து SQ 468 விமான ஊடாக 75 பயணிகளும் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று காலை (18) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 79 தனிமைப்படுத்தல் மையங்களில் 7,961 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று டிசம்பர் (17) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 14,272 ஆகும். latest Nike Sneakers | Air Jordan Release Dates 2020