12th December 2020 05:15:27 Hours
கிளிகொச்சி முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி பிரிகேடியர் பியால் நானயகரவசம் 2020 டிசம்பர் மாதம் 05 ம் திகதி முருகண்டி 5வது இலங்கை இராணுவ பொலிஸ் முகாமுக்கு விஜயம் செய்தார். வருகை தந்த தளபதியை 5 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் தில்ஷான் பெரேரா வரவேற்றார். அத்துடன் அங்கு படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 5 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையின் பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர் பின்னர் படையினருக்கு உரையாற்றுகையில் படையினரின் கடின உழைப்பைப் பாராட்டினார் அத்துடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். விஜயத்தின் ஞாபகார்த்தமாக முகாம் வளாகத்தில் ஒரு சந்தன மரக்கன்றை நாட்டிவைத்ததுடன் விருந்தினர் பதிவேட்டுப்புத்தகத்தில் தனது எண்ணத்தை பதிவிட்டார்.Buy Sneakers | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival