11th December 2020 14:14:39 Hours
இன்று (11) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 538 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 68 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர் ஏனைய அனைவரும் உள்நாட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 304 பேர் கொழும்பு மாவட்டம், 38 பேர் கண்டி மாவட்டம், 28 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்று (11) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 26,981 பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 18,853 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059 கொழும்பு மீன் சந்தை கொத்தணி 23,922
அதன் பிரகாரம் (10) ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 30,612 ஆகும். அவர்களில் 22,260 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று (10) ஆம் திகதி வரை 8,206 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை (11) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 461 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்று காலை (11) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக மரணங்கள் இரண்டு பதிவாகியுள்ளது. அவர்கள் கொழும்பு 02 மற்றும் வெலிகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் அந்த வகையில் இன்றுவரை (11) கொவிட் மரணங்கள் 146 ஆகும்.
இன்று (11) காலை கட்டாரில் இருந்து QR 668 விமான ஊடாக 46 பயணிகளும் அவுஸ்திரேலியாவில் இருந்து UL 605 விமான ஊடாக 79 பயணிகளும் ஜபானில் இருந்து UL 455 விமான ஊடாக 12 பயணிகளும் வருகை தந்துள்ளனர். மேலும் இன்று (11) மாலைத்தீவில் இருந்து UL 102 விமானம் ஊடாக 40 பயணிகளும் இத்தாலியில் இருந்து UL 1208 விமான ஊடாக 64 பயணிகளும் ஐக்கிய அரபு ராஜ்சியத்தில் இருந்து UL 504 விமான ஊடாக 70 பயணிகளும், மலேசியாவில் இருந்து UL 320 விமான ஊடாக 04 பயணிகளும் சீனாவில் இருந்து MU 232 விமான ஊடாக 30 பயணிகளும் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
இன்று காலை (11) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 65 தனிமைப்படுத்தல் மையங்களில் 6,896 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று டிசம்பர் (10) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 14,416 ஆகும். bridge media | Nike