09th December 2020 11:45:36 Hours
இன்று (09) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 798 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர் ஏனைய அனைவரும் உள்நாட்டவர்கள் ஆவர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 526 பேர் கொழும்பு மாவட்டம், 97 பேர் கம்பஹா மாவட்டம், 53 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. .
இன்று (09) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 25,818 பேர் ஆகும். அவர்களில் மொத்தம் 17,850 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி 3,059 கொழும்பு மீன் சந்தை கொத்தணி 22,759.
அதன் பிரகாரம் (08) ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 29,377 ஆகும். அவர்களில் 21,257 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று (08) ஆம் திகதி வரை 7,978 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை (09) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 454 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர் இன்று காலை (09) வரை, கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.மரணங்களின் மொத்த எண்ணிக்கை 142 ஆகும்.
இன்று (09) காலை மாலைத்தீவில் இருந்து UL 104 விமான ஊடாக 41 பயணிகளும் கட்டாரில் இருந்து QR 668 விமான ஊடாக 26 பயணிகளும் சவுதி அரேபியாவில் இருந்து UL 1264 விமான ஊடாக 158 பயணிகளும் டுபாயில் இருந்து UL 226 விமான ஊடாக 42 பயணிகளும் கட்டாரில் இருந்து UL 218 விமான ஊடாக 22 பயணிகளும் வருகை தந்துள்ளனர். மேலும் இன்று (09) இந்தியாவில் இருந்து UL 1042 விமானம் ஊடாக 06 பயணிகளும் மாலைத்தீவில் இருந்து UL 102 விமான ஊடாக 03 பயணிகளும் பங்காளதேஷில் இருந்து UL 190 விமான ஊடாக 35 பயணிகளும், சிங்கபூரில் இருந்து UL 303 விமான ஊடாக 218 பயணிகளும் சீனாவில் இருந்து UL 881 விமான ஊடாக 06 பயணிகளும் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
இன்று காலை (09) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 64 தனிமைப்படுத்தல் மையங்களில் 6,594 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று டிசம்பர் (08) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 11,182 ஆகும். jordan Sneakers | New Releases Nike