Header

Sri Lanka Army

Defender of the Nation

04th December 2020 11:42:19 Hours

தனிமைப்படுத்தல் மையங்களில் 6,436 தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - நொப்கோ தெரிவிப்பு

இன்று (04) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 628 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவரும், ஏனைய அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டவர்களாவர். மேலும் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானர்வர்களில் 402 பேர் கொழும்பு மாவட்டம், 66 பேர் கம்பஹா மாவட்டம் மற்றும் 35 பேர் இரத்னபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (04) காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,484 பேர் ஆகும். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் 3,059 பேரும்,பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் 19,425 பேரும் உள்ளடங்குவர், அவர்களில் மொத்தம் 15,624 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன் பிரகாரம் நேற்று (03) ஆம் திகதி வரை, மரணமானவர்கள் உட்பட மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 26,037 ஆகும். அவர்களில் 19,031 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அதற்கமைய 6,877 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (04) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 728 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்று வரை, கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 129 ஆகும். நேற்று இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 05 மரணங்கள் பதிவாகியுள்ளது. அவர்கள் கொலன்னாவை, கொழும்பு 10, கொழும்பு 12, மற்றும் கொழும்பு 02 ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று (04) காலை கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 45 பயணிகளும் குவைட் நாட்டில் இருந்து UL 230 விமானம் ஊடாக 295 பயணிகளும், ஜபானில் இருந்து UL 455 விமான ஊடாக 05 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை (04) வரை முப் படையினரால் நிர்வகிக்கப்படும் 59 தனிமைப்படுத்தல் மையங்களில் 6,436 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று டிசம்பர் (03) ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 13,632 ஆகும். Authentic Sneakers | Air Jordan