25th November 2020 21:39:48 Hours
பி.சி.ஆர் சோதனைகளுக்கான கட்டணங்கள் மற்றும் அத்தகைய செலவுகளை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து தனியார் துறை வைத்தியசாலை மற்றும் ஆய்வக அதிகாரிகளுடன் இன்று (25) பிற்பகல் நடைபெற்ற கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் சிறப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது
கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் வைத்திய நிபுணரும் பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் தலைமையில் நடைப்பெற்ற கலந்துரையாடலில். தனியார் துறையில் பி.சி.ஆர் சோதனைகள் மற்றும் மாறுபட்ட கட்டணங்கள் குறித்து இந்த சந்திப்பு பெரும்பாலும் கவனம் செலுத்தப்பட்டது. நாடு சுகாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இவ் வேளையில் இரகசிய நடைமுறைகளை நாடாமல் பொதுவான நடைமுறைகளை செயல்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டது.
இணைத் தலைவர்கள் குறித்த பங்குபற்றாளர்களுடனான கலந்துரையாடலின் போது எழுந்த பிரச்சினைகளை கவனமாகக் செவிமடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டனர். பணம் செலுத்தும் அடிப்படையில் தனியார் மட்டத்தில் இத்தகைய சேவையைப் பெற யாராவது ஆர்வமாக இருந்தால், அத்தகைய சோதனைகளை ஒரு முதன்மை தேசியத் தேவையாக கருதி செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. latest Nike Sneakers | Nike Shoes