Header

Sri Lanka Army

Defender of the Nation

24th November 2020 11:00:05 Hours

மேலும் வெளிநாட்டிலிருந்து பலர் வருகை

இன்று (25) காலை வரையான கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 458 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டவர்கள். குறித்த தொற்றாளர்களில் 259 பேர் கொழும்பு மாவட்டம், 78 பேர் களுதுறை மற்றும் 23 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் என கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

மினுவாங்கொடை கொத்தணி மற்றும் மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,432 பேர் ஆகும். அவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் 3,059 பேரும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியில் 14,373 பேர் ஆவர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணி தொற்றாளர்களில் மொத்தம் 11,156 பேர் சுகமடைந்து வெளியேறியுள்ளனர்.

அதன் பிரகாரம் 24 ஆம் திகதி வரையான மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மரணித்தவர்களின் உள்ளடங்களாக 20,965 ஆகும். அவர்களில் 14,961 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று காலை வரை 5,910 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை (25) 0600 மணியளவில் (கடந்த 24 மணி நேரத்திற்குள்) முழுமையாக சுகமடைந்த 465 பேர் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதனடிப்படையில் 25 ஆம் திகதி காலை வரை கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 94 ஆகும். இன்று காலை (25) வரையான கடந்த 24 மணிநேரத்திற்குள் இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக 04 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் கொழும்பு 15, கினிகத்ஹேன, சியளாம்பே தெற்கு மற்றும் பண்டாரகம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று (24) காலை தோஹா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 02 பயணிகளும், டுபாயிலிருந்து UL 226 விமானம் ஊடாக 50 பயணிகளும் , இந்தியாவில் இருந்து UL 1042 விமானம் ஊடாக 92 பயணிகளும், மாலைத்தீவில் இருந்து UL 104 விமானம் ஊடாக 53 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று காலை (25) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 45 தனிமைப்படுத்தல் மையங்களில் 4,797 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நவம்பர் 24 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 7,467 ஆகும். best Running shoes brand | NIKE AIR HUARACHE