Header

Sri Lanka Army

Defender of the Nation

20th November 2020 11:20:56 Hours

தொற்றுக்குள்ளான தாய் மற்றும் மகனை கண்டுபிடிக்க பொலிஸார் முயற்சி- நொப்கோ

இன்று (20) காலை வரை, கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 439 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 01 நபர் வெளிநாட்டு கப்பல் பாதுகாவலரும் மற்றும் ஒருவர் இந்தியாவில் இருந்து வருகை தந்தவருமாவர், ஏனைய 437 பேரும் உள்நாட்டில் இனங் காணப்பட்டுள்ளவர்களாவர். குறித்த தொற்றாளர்களில் 305 பேர் கொழும்பு மாவட்டம், 58 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் எனகொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளான பேலியகொடை பிரதேசத்தை சேர்ந்த தாய் மற்றும் அவளது மகன் ஒருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் IDH வைத்தியசாலையை விட்டு தப்பியோடியுள்ளனர். மேலும் இது தொடர்பாக பெலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று (20) காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 15324 பேர் ஆகும். அவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் 3,059 பேரும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியில் 12,265 பேரும் உள்ளடங்குவர். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியை சேர்ந்த தொற்றாளர்களில் மொத்தம் 9478 பேர் சுகமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன் பிரகாரம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிலுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18838 ஆகும். அவர்களில் 12,902 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 5,867 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்திற்குள் கொவிட்-19 தொற்று காரணமாக 4 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் கொழும்பு 15, 10, களுத்துரை பொக்குனுவிட்ட மற்றும் களுத்துரை ஹல்தோட்டை பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர். அதனடிப்படையில் இதுவரை கடந்த 24 மணிநேரத்திற்குள் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மரணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 73 ஆகும். இன்று காலை கடந்த 24 மணி நேரத்திற்குள் வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து 377 பேர் முழுமையாக சுகமடைந்த வெளியேறியுள்ளனர்.

கொவிட்-19 தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய முதலாவது மற்றும் இரண்டாவது தொடர்பாளர்கள் மொத்தமாக 30000 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இன்று (20) காலை டோஹா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 02 பயணிகளும் அவுஸ்திரேலியாவில் இருந்து UL 607 விமானம் ஊடாக 52 பயணிகளும், ஜப்பானில் இருந்து UL455 விமானம் ஊடாக 12 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளனர்

இன்று காலை (20) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 36 தனிமைப்படுத்தல் மையங்களில் 3812 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நவம்பர் 19 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 10356 ஆகும். Best jordan Sneakers | Sneakers