14th November 2020 08:50:05 Hours
573 வது பிரிகேட்டின் புதிய தளபதியாக பிரிகேடியர் மனோஜ் மதுரபிரேரும வெள்ளிக்கிழமை (13) மாங்குளம் தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடமை ஏற்றுக் கொண்டார்.
கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 57 வது படைப்பிரிவின் 573 வது பிரிகேட் புதிய தளபதியினை பணிநிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் 3 வது கஜபா படையினரின் பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதையின் பின்னர் பிரிகேடியர் மனோஜ் மதுரபிரேரும தனது பதவியேற்பிக்கான உத்தியோப்பூர்வ ஆவணத்தில் சிரேஸ்ட அதிகாரிகளின் முன்னிலையில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கையொப்பமிட்டார்.
இந்த நியமனத்திற்கு முன்னர் பிரிகேடியர் மதுரபிரேரும எம்பிலிப்பிட்டியில் உள்ள பொறியாளர்கள் பயிற்சி பள்ளியின் தளபதியாக பணியாற்றினார்.
நிகழ்வில் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்து மற்றும் அதிகாரிகள் மற்றும் படையினருக்கான உரை என்பன இடம்பெற்றன. கட்டளை அதிகாரிகள் மற்றும் பிரிகேட் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு பாடநெறிக்காக கர்னல் ரசிகா பெரேரா சென்றதன் பின்னர் குறித்த பதவிக்கு பிரிகேடியர் மனோஜ் மதுரபிரேரும நியமிக்கப்பட்டார். Nike sneakers | Men’s shoes