Header

Sri Lanka Army

Defender of the Nation

12th November 2020 21:33:36 Hours

இலங்கை பொறியியலாளர் படையணியின் 69 வது ஆண்டு நிறைவு தினம்

இலங்கை பொறியியலாளர் படையணியின் 69 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வானது, செவ்வாய்கிழமை 10 ஆம் திகதி இலங்கை பொறியியலாளர் படையணி தலைமையகத்தில் இடம் பெற்றது. இதில் படையணியில் உயிர் நீத்த போர் வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

பனாகொடையில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை பொறியியலாளர் படையணியின் படைத் தளபதியும் மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் கலந்து கொண்டார். அவர் படையணியின் மத்திய தளபதி பிரிகேடியர் மங்கள மாயதுன்ன அவர்களினால் வரவேற்கப்பட்டதோடு,பொறியியலாளர் படையினரால் பிரதம அதிதியவர்களுக்கு நுழைவாயிற் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிர் நீத்த போர் வீரர்களின் நினைவுச் தூபிக்கு மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் நினைவஞ்சலி செலுத்தினார். குறித்த நிகழ்வில் தேசிய கீதம், இராணுவ பாடல் மற்றும் பொறியியலாளர்களின் பாடல் பாடப்பட்டது.

பின்னர் உயிர் நீத்த படையினர்களின் மதிப்பற்ற தியாகங்களுக்காக மத அனுஷ்டானங்கள், இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல் ஆகியன இடம் பெற்றன. பின்னர் மெலடி இசைக்கு மத்தியில் மலர் மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அன்றைய பிரதம விருந்தினருக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் இராணுவ டிரம்மர்களால் ‘ரண பெரா’ மேளம் அடிக்கும் நிகழ்வு இடம்பெற்றது . சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் சமூக தொலைதூர நடைமுறைகளை பின்பற்றி அன்றைய நினைவு நிகழ்வில் கலந்து கொண்டனர்.Adidas shoes | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ