Header

Sri Lanka Army

Defender of the Nation

12th November 2020 11:28:09 Hours

பூரண சுகமடைந்த 649 கொவிட்-19 நோயாளிகள் வெளியேறல்-நொப்கோ தெரிவிப்பு

இன்று காலை (12) அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 635 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் ஏனைய அனைவரும் உள்நாட்டில் இனங் காணப்பட்டுள்ளவர்களாவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (12) காலை 6.00 வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் பேலிகொடை மீன் சந்தை கொத்தணியில் பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,857 பேர் ஆகும்.

பாகிஸ்தானிலிருந்து G9501 விமானம் ஊடாக 25 பயணிகளும், டோகா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 31 பயணிகளும் ஓமானில் இருந்து WI 371 விமானம் ஊடாக 20 பயணிகளும் இலங்கை வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து பிசிஆர் பரிசோதனையின் பின்னர் 02 நபர்கள் இன்று (12) வீடு திரும்ப உள்ளனர்.

இன்று காலை (12) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 29 தனிமைப்படுத்தல். மையங்களில் 2,690 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நவம்பர் 11 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 10,207 ஆகும். அத்தோடு இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த PCR பரிசோதணைகளின் எண்ணிக்கை 629,315 ஆகும்.

முழுமையாக சுகமடைந்த 646 பேர் வைத்தியசாலைகளில் இருந்து இன்று காலை (12) 0600 மணியளவில் வெளியேறியுள்ளனர்.(முடிவு) latest Running | Nike