11th November 2020 09:40:31 Hours
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு இணைப்பாளரான லெப்டினன் கேணல் ரவி சேகர் மிஷ்ரா அவர்கள் தான் பதவியில் இருந்து விடைபெறுவதனை முன்னிட்டு பாதுகாப்புத் தலைமைத் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் உள்ள அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை 10 ஆம் திகதி காலை சந்தித்தார்.
குறித்த நல்லுறவு சந்தப்பின் போது, வெளிச்செல்லும் தூதுவர் தான் இலங்கையில் பணியாற்றிய காலத்தில் அவருக்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணத்திற்காக தனது நன்றியைத் தெரிவித்தார். மற்றும் இராணுவத்தின் புரிந்துணர்வு சகோதரத்துவத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை அவர்கள் நினைவு கூர்ந்தனர், மேலும் இதுபோன்ற உறவுகளை மேலும் உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டினர்.
இறுதியில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாரப்பட்டன. latest Nike Sneakers | Air Jordan