08th November 2020 09:50:48 Hours
இன்று (09) காலை வரையான அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணி நேரத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 510 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங் காணப்பட்டுள்ளவர்களாவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிக்கையிட்டுள்ளது.
இன்று (09) காலை 6.00 மணி வரை மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,451 பேர் ஆகும். அவர்களில் 1,041 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், 1,007 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியை சார்ந்தவர்கள், ஏனைய 8,403 பேர் பேலியகொடை மீன் சந்தை மற்றும் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 412 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதோடு, அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய தொற்றாளர்கள் 4,449 பேர் இதுவரை சுகமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இன்று (09) காலை டோகா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 01 பயணி இலங்கை வருகை தந்துள்ளார். அவர் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை (09) வரை மொத்தம் 63,921 பேர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்று காலை (09) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 27 தனிமைப்படுத்தல் மையங்களில் 2,409 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நவம்பர் 08 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 10,632 ஆகும். அத்தோடு இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த PCR பரிசோதணைகளின் எண்ணிக்கை 602,850 ஆகும்.
முழுமையாக சுகமடைந்த 562 பேர் வைத்தியசாலைகளில் இருந்து இன்று காலை (09) 0600 மணியளவில் வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் என தகவல் தெரிவிக்கப்படுகின்றது.(முடிவு) Sports News | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf