04th November 2020 14:49:58 Hours
இராணுவத் தலைமையகத்தின் இராணுவத் தளபதி காரியாலயத்தில் இன்று காலை (3) இராணுவத்தின் மேஜர் ஜெனரல்களாக நிலையுயர்த்தப்பட்ட நான்கு பேரும் தங்களது புதிய நிலைக்கான சின்னங்களை பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
அதன்படி விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் இந்திரஜித் கந்தனராச்சி, பொறியாளர் படைப்பிரிவு பொது அதிகாரி கட்டளை பிரிகேடியர் சந்தன விஜயசுந்தர , 52 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் கித்சிரி லியனகே மற்றும் இலங்கை இராணுவத தொண்டர் படை பிரதி தளபதி பிரிகேடியர் கிறிஸ்டி ஜயசிங்க ஆகிய நால்வருக்கும் சின்னம் அணிவித்து இராணுவத் தளபதி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
சுருக்கமான உரையாடலின் போது லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்ததோடு. பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதியின் பரிந்துரைகளின் பேரில், சேனாதிபதியான ஜனாதிபதியினால் பதவி உயர்வுகளை அங்கிகரித்தமையை நினைவுகூர்ந்தார். Mysneakers | Sneakers