31st October 2020 09:00:27 Hours
எம்பிலிப்பிட்டியில் உள்ள எயாமொபைல் பிரிகேட் தலைமையகத்தின் 21 வது படைத் தளபதியாக பிரிகேடியர் தினேஷ் உதுகம அவர்கள் தனது கடமைகளை வியாழக்கிழமை (29) படைத் தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாக நியமிக்கப்பட்ட எயாமொபைல் பிரிகேட் படைத் தளபதி பதி நிலை அதிகாரிகளால் வரவேற்கப்பட்டதோடு, அவருக்கு இலங்கை சினங்க படையணியின் 12 வது பட்டாலியனின் படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையளிக்கப்பட்டது. பின்னர், அவர் தனது அதிகாரப்பூர்வ ஆவணத்தில் மகா சங்க உறுப்பினர்கள் பல சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் செத் பிரித்நிகழ்வுக்கு மத்தியில் தனது கையொப்பத்தை வைத்து கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் படை வளாகத்தில் ஒரு மரக்கன்றினை நட்டார்.
இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் பிரிகேடியர் தினேஷ் உடுகம 532 பிரிகேட் படையின் படைத் தளபதியாக பணியாற்றினார்.
அனைத்து படையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட அவர், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் மத்தியில் உரையாற்றினார். இந்நிகழ்வில் கட்டளை அதிகாரிகள், படைப்பிரிவு ஊழியர்கள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினரும் கலந்து கொண்டனர். bridgemedia | Air Jordan Sneakers