29th October 2020 16:12:18 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 57 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 572 ஆவது பிரிகேட் படையின் 9 ஆவது படைத் தளபதியாக கேணல் நிஷாந்த முதுமால அவர்கள் சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் வியாழக்கிழமை 29 ஆம் திகதி தனது கடமையை 572 ஆவது பிரிகேட் படைத் தலைமையகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த 572 ஆவது பிரிகேட் படையின் புதிய படைத் தளபதியவர்கள் பதவி நிலை அதிகாரிகளால் வரவேற்கப்பட்டதோடு, இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் 145 ஆவது பட்டாலியன் படையினரால் இராணுவ மரியாதையளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார். அதன் பின்னர் கேணல் நிஷாந்த முதுமால அவர்கள் மகாசங்க உறுப்பினர்களின் ‘செத் பிரித்’ நிகழவுகளுக்கு மத்தியில் தனது கையொப்பத்தினையிட்டு கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். இதில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாயினர் பரசன்னமாகியிருந்தனர்.
பின்னர் அவர் படைத் தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நட்டார்.buy footwear | Sneakers Nike Shoes