27th October 2020 08:58:42 Hours
இன்று (27) காலை அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணித்தியாளத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 541 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டுள்ளவர்களாவர் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.
இன்று (27) காலை 6.00 வரை மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 4941 பேர் ஆகும். அவர்களில் 1041 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், ஏனைய 3900 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
அபுதாபியில் இருந்து EY 264 விமானம் ஊடாக 06 பயணிகளும் மற்றும் தோகா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 11 பயணிகளும் கொழும்பை வந்தடைந்தனர். குறித்த அனைவரும் முப்படைகளினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 88 நபர்கள் இன்று (27) வீடு திரும்ப உள்ளனர். அவர்களில், ஹோட்டல் செரடன் கொஸ்கொட தனிமைப்படுத்தல் மையத்தில் 12, டாகனர் ஆசிரியர் பயிற்சி நிலைய தனிமைப்படுத்தல் மையத்தில் 57, கொக்கல ரிசோட் தனிமைப்படுத்தல் மையத்தில் 09, ஹொரன ஆசிரியர் பயிற்சி தனிமைப்படுத்தல் மையத்தில் 10, ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் ஆவர்.
அதேபோல் இன்று வரை மொத்தம் 57814 பேர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்று காலை (27) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 75 தனிமைப்படுத்தல் மையங்களில் 8090 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று 26 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதணைகளின் மொத்த எண்ணிக்கை 7682 ஆகும். அத்தோடு இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த PCR பரிசோதணைகளின் எண்ணிக்கை 458518 ஆகும்.
முழுமையாக சுகமடைந்த 130 பேர் வைத்தியசாலைகளில் இருந்து இன்று காலை (27) 0600 மணியலவில் வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் ஆவர்.jordan Sneakers | Nike