26th October 2020 19:41:45 Hours
பாதுகாப்புத் தலைமை பிரதானியும் , இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வியாழக்கிழமை (22) ஓய்வு பெற்றுச் செல்லும் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும் மற்றும் இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களுக்கு இராணுவ தலைமையகத்தில் வைத்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்திற்கு அவர் செய்த அர்ப்பணிப்பு சேவைகளைப் பாராட்டிய இராணுவத் தளபதி , ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார், அவர் இராணுவ தலைமையக பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர், இராணுவ பதவி நிலை பிரானி, (பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்பு - பாதுகாப்பு), பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர், இராணுவ ஊடக பேச்சாளரும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மைய மற்றும் நகர அபிவிருத்தி பணிப்பாளர், இராணுவ பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலக நடவடிக்கை பணிப்பாளர், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரி தலைமை பயிற்றுவிப்பாளர், 59 ஆவது காலாட்படை பிரிவு படைத் தளபதி, யாழ் பாதுகாப்பு கட்டளைத் தளபதி, இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி உட்பட இராணுவத்தில் பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார்
வெளியேறும் சிரேஷ்ட அதிகாரி தனது தளபதியவர்களின் விருப்பத்திற்கும், சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியிடமிருந்து பெற்ற ஊக்கத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். உரையாடலின் முடிவில், லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்லும் அவரை பாராட்டும் முகமாக அவருக்கு சிறப்பு நினைவு சின்னத்தினை வழங்கினார். இராணுவத் தளபதிக்கும் அவரினால் நினைவு சின்னம் வழங்கப்பட்டது. Best jordan Sneakers | nike