26th October 2020 09:00:47 Hours
பாதுகாப்புத் தலைமை பிரதானியும் , இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வெள்ளிக்கிழமை (23) ஓய்வு பெற்றுச் செல்லும் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களுக்கு இராணுவ தலைமையகத்தில் வைத்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இராணுவத்திற்கு அவர் செய்த அர்ப்பணிப்பு சேவைகளைப் பாராட்டிய இராணுவத் தளபதி , ஓய்வு பெற்றுச் செல்லும் அவர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார், அவர் மத்திய பாதுகாப்பு படைத் தளபதியாக நியமிக்கப்பட முன்னர், 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி , முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பதவி நிலை அதிகாரி, இராணுவத்தில் பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார்.
இலங்கை பீரங்கி படையணியின் பெருமைமிக்க மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்கள் தளபதியவர்களின் விருப்பத்திற்கும், சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியிடமிருந்து பெற்ற ஊக்கத்தைப் பற்றி குறிப்பிடுகிறார்.
உரையாடலின் முடிவில், லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்லும் அவரை பாராட்டும் முகமாக அவருக்கு சிறப்பு நினைவு சின்னத்தினை வழங்கினார். இராணுவத் தளபதிக்கும் அவரினால் நினைவு சின்னம் வழங்கப்பட்டது. jordan release date | Releases Nike Shoes