09th October 2020 11:30:03 Hours
56 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்தின் 23 ஆவது நிறைவாண்டு விழாவை முன்னிட்டு (ஒக்டோபர் 17), வெள்ளிக்கிழமை (2) ஆம் திகதி வவுனியா ஜும்மா மஸ்ஜித் மசூதியில் இஸ்லாமிய மத பிரார்த்தனைகளும், சனிக்கிழமை (3) ஆம் திகதி ரன் கோவிலில் இந்து ஆன்மீக ஆசீர்வாதமும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை(4) ஆம் திகதி புனித கத்தோலிக்க தேவாலயத்தில் கதோலிக்க ஆராதனையும் இடம்பெற்றதோடு, பௌத்த சமய அனுஷ்டான நிகழ்வுகள் விரைவில் நடைபெறும்.
இந்த நிகழ்வுகள் அனைத்தையும் 21 ஆவது இலங்கை சிங்க படையணி மற்றும் 16 ஆவது இலங்கை சிங்க படையணியினர் இணைந்து ஆண்டு நிறைவின் மத வழிப்பாடுகளை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் 56 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி, மேஜர் ஜெனரல் வசந்த டி அப்ரூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், 561, 562 மற்றும் 563 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகள், 56 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவில் உள்ள அனைத்து கட்டளை பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் மற்றும் சிவில் ஊளியர்கள் பலர் கலந்துகொண்டனர். Running sports | Sneakers