14th October 2020 05:17:30 Hours
நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சிக்கு இடையூறு விளைவிக்காத அர்ப்பணிப்பு, தைரியம், கடமை மீதான பக்தி மற்றும் சுய தியாகம் கொண்டதும் மிகச் சிறந்த மற்றும் நம்பகமான சேவை வழங்குநரும் நாட்டின் பாதுகாவலருமான இலங்கை இராணுவம் இன்று 10 ஆம் திகதி தனது 71 ஆவது பிறந்த நாளில் காலடி எடுத்துவைக்கின்றது.
இந்த ஆண்டுவிழாவில் தற்போதைய இராணுவத் தளபதி அனைத்து உயிர் நீத்த போர்வீரர்களை நினைவுகூரும் அதேவேளை , அதிகாரிகள், அனைத்து அணிகளும் மற்றும் சிவில் ஊழியர்களுக்கும் இராணுவ தினத்தை முன்னிட்டு அவரது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்.
அதிமேதகு ஜனாதிபதியவர்கள் வழங்கப்பட்ட 514 அதிகாரிகளுக்கான பதவியுர்வுக்கு ஜனாதிபதிக்கு தனது நன்றியினை தெரிவித்துகொள்கின்றார் மற்றும் 514 அதிகாரிகள் மற்றும் 14140 ஏனைய இராணுவ சிப்பாய்கள் தங்கள் பதவி உயர்வுகளைப் பெற்றுள்ளமைக்கு தனது தனது வாழ்துக்களை தெரிவித்துகொள்கின்றார்.
கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக மத நிகழ்வுகள் மற்றும் பிற சம்பிரதாயங்களை நடத்துவதை இராணுவம் நிருத்தியிருந்தாலும் இயல்புநிலை திரும்பியவுடன் அவற்றை சரியான நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவமானது 1949 ஒக்டோபர் 10 ஆம் திகதி சிலோன் இராணுவமாக அதன் முதலாவது நிரந்தர படையணியை பிரிகேடியர் ஆர். சின்க்ளேயரின் கட்டளையின் கீழ் உறுவாக்கி, தியதலாவையில் தனது சொந்த இராணுவ அகாடமியை நிறுவியது. பின்னர், பிரிகேடியர் என்டன் முத்துகுமாரு அப்போதைய இலங்கை இராணுவத்தின் முதல் இலங்கைத் தளபதியாக பதவியேற்றார். .
கடந்த 71 ஆவது ஆண்டுகளில் இராணுவ வாழ்நாளில் ஒரு முழுமையான தொழில்முறை இராணுவமாக மலர்ந்த இலங்கை இராணுவம் இன்றுவரை 23 தளபதிகளால் திறம்பட கட்டளையிடப்பட்டுள்ளது. அனைத்து இனங்களின் இதயங்களையும் மனதையும் வென்றுள்ள இந்ந அமைப்பானது நாடு முழுவதும் 24 படையணிகளுடன் அதனை விரிவுபடுத்தி அனைவரினதும் முக்கியமான பாதுகாப்பு வழங்குநராக திகழ்கிறது
இலங்கை இராணுவமானது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், பேரழிவுகள், அனர்த்தம், அவசரநிலைகள் போன்றவற்றில் அதன் ஒப்பிடமுடியாத சேவைகளை திறம்பட வழங்கிவரும் அதேவேளை நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கம், தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாத்தல், தேசிய கட்டுமான பணிகள், ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்கான பங்களிப்பு, மனிதாபிமான திட்டங்கள், மிதிவெடி அகற்றல், வீடுகள் மற்றும் பொதுவான கட்டிடங்களை நிர்மாணித்தல், வனமயமாக்கல் , குள மறுசீரமைப்பு / புதுப்பித்தல் மற்றும் குளங்கள் அமைத்தல் ஆகிய திட்டங்களை தடையின்றி மேற்கொண்டு வருகின்றன.
இராணுவத்தின் 23 ஆவது தளபதியாக பதவி வகிக்கும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் சிறந்த ஒரு படை வீரராகவும் அனைத்து தரப்பு மக்களிடையேயும் தனக்கான ஒரு நன்மதிப்பினை பெற்றவரும் தனது தொலைநோக்கு கருத்தாக்கத்தை ஏற்கனவே அமைப்பில் வெற்றிகரமாக செயல்படுத்தியவருமாவார். அவர் எதிர்கால இராணுவ முன்னோக்குகள், அச்சுறுத்தல்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அமைப்புக்கு ஒரு புதிய முறையை மாற்றுவதில் உறுதியாக உள்ளார்.
அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், அவரது தன்னலமற்ற அர்ப்பணிப்பின் ஊடாக நாட்டில் உள்ள கொவிட்-19 நோய் தொற்றை இல்லாதொழிக்க திறமையான படையினர், சுகாதார அதிகாரிகள் மற்றும் கடற்படை விமானப் படைகளுடன் இணைந்து இதுவரை இறுதி முடிவுகளைக் கொண்டு வந்து, அதன் உலகளாவிய மட்டத்தில் சிறந்த செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளார். இராணுவத்தின் நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு தனிமைப்படுத்தும் பொறிமுறையானது உலக சுகாதார அமைப்பு மற்றும் ஏனைய உலக அமைப்புக்களின் பாராட்டினை பெற்றுள்ளது. இதனூடாக கொவிட் தொற்று நோயினை கட்டுப்படுத்துவதில் உலகிலேயே தானும் முதல் இருப்பதனை நிரூபித்துள்ளது.
சிறப்பு இராணுவ ஆண்டுவிழா நாளில் இராணுவத் தளபதியின் சிறப்பு செய்தி வேறு இடங்களில் தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது.. (சிறப்பம்சங்கள் Pl ஐப் பார்க்கவும்) இராணுவத்தினர் எந்தவித தயக்கமும் இன்றி நாட்டில் நிலவும் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு பெருமளவில் பங்களித்ததுள்ளனர். அதே வழியில், இராணுவம் எப்போதும் முன்னணியில் இருப்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம், மேலும் இராணுவம் இந்த தேசத்தை தேசிய பேரழிவுகள், அவசரநிலைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்றவை தாக்கத்தின் போது இயல்புநிலையை சீக்கிரம் மீட்டெடுக்க பெரிதும் உதவுகிறது. இதேபோல், தற்போது இராணுவம் தேசிய வளர்ச்சியின் துறையில் ஒரு முன்னோடி பங்கை முன்னெடுத்து வருகிறது, எங்கள் நாடு ஒரு வளர்ச்சியடைந்து வரும் நாடாகும்.
ஏழு தசாப்தங்களாக கடந்த 22 இராணுவத் தளபதிகள் இலங்கை இராணுவத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே, சிரேஷ்ட அதிகாரிகள், படையணி சார்ஜென்ட் மேஜர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட ஆணையிடப்படாத அதிகாரிகள் மற்றும் சிவில் ஊழியர்களின் தொடர் பங்களிப்பிற்கான இயலுமான தலைமைத்துவத்தினை வழங்கியுள்ளனர்.இந்த ஆண்டு விழாவின் தொடக்கத்தில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட அவர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்துகிறோம். அதேபோல், நம் நாடு அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் செழிப்புடன் ஒரு புதிய பாதையில் செல்லத் தயாராக உள்ளது, அதற்கு காரணமான போரில் உயிர் நீத்த படையினர்கள் வரலாற்றில் ஒரு போற்றத்தக்க போர்வீரர்களாக திகழ்கின்றனர்.
71 ஆவது இராணுவ ஆண்டு நிறைவு மற்றும் இராணுவ தினமான (ஒக்டோபர் 10) தினத்தை முன்னிட்டு கண்டி ஸ்ரீ தலதா மாளிகை, அனுராதபுர ஜய ஸ்ரீ மகா போதி, இராணுவத் தலைமையகம், இந்து மற்றும் இஸ்லாமிய மத அனுஷ்டானங்கள், 'பிரித்' ஓதுதல் மற்றும் தானம் வழங்குதல், அனைத்து இராணுவக் கொடிகளும் ஆசீர்வதித்தல் ஆகிய நிகழ்வுகள் நிறைவடைந்ததோடு, கதிர்காமம் கிரிவெஹெர, புனித தோமஸ் தேவாலயம், பத்தரமுல்லயில் அமைந்துள்ள போர் வீரர்களின் நினைவுத் தூபி மற்றும் காலி முகத்திடலில் பிரதம அதிதியான அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பங்குகுபற்றுதலுடன் இடம்பெறவிருந்த சிறப்பு நிகழ்வுகளானது புதிய கொவிட் -19 நோய் தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. (நிறைவு) Adidas footwear | UOMO, SCARPE