Header

Sri Lanka Army

Defender of the Nation

08th October 2020 10:01:11 Hours

ஆடை தொழிற்சாலையின் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு – கொவிட் மையம் தெரிவிப்பு

இன்று காலை 08 ஆம் திகதி அறிக்கையின்படி 207 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மினுவாங்கொடை தொழிற்சாலையைச் சேர்ந்த 202 பேரும், மற்றும் 5 பேர் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் (ரஷ்யாவில் இருந்து வருகை தந்து பிடிபான தனிமை படுத்தல் மையத்தில் (03), இந்தியாவைச் சேர்ந்த மாலுமிகள் (02) பேர் என்று கொவிட் மையம் தெரிவித்துள்ளது.

இன்று (08) காலை 6.00 மணியளவின் அறிக்கையின்படி, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பதிவான கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1034. ஆகும்.

தோஹா கட்டாரில் இருந்து QR 668 விமான மூலம் 42 பயணிகள் இன்று (08) காலை கொழும்பு வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிருவகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (08) தனிமைப்படுத்தப்பட்ட 164 நபர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பு தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அவர்களில் 02 நபர்கள் ருவல கல்பிட்டிய தனிமை படுத்தல் மையத்திலும், ஜெட்விங் பீச் தனிமை படுத்தல் மையத்தில் (01), ஹோட்டல் மீரகே தனிமை படுத்தல் மையத்தில் 06 பேர், ஹோட்டல் ருவன்வெலி தனிமை படுத்தல் மையத்தில் 10 பேர், ராஜகிரிய தனிமை படுத்தல் மையத்தில் 12 பேர், தியகம தனிமை படுத்தல் மையத்தில் 18 பேர், கொஸ்கொட ஷெராடன் தனிமை படுத்தில் 48 பேர், விவசாய பயிற்சி பாடசாலை தனிமை படுத்தல் மையத்தில் ஒருவரும், ஹம்பந்தோட்ட சங்கிரிலா ஹோட்டல் தனிமை படுத்தல் மையத்தில் 61பேர், கல்கந்த தனிமை படுத்தல் மையத்தில் ஒருவர், ஹபரதுவ பொலிஸ் 04 பேர், ஆகிய தனிமை படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.

08 ஆம் திகதி காலை வரையான காலப் பகுதியில் 49,577 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இன்று (08) காலை அறிக்கையின் பிரகாரம் முப்படையினரால் நிர்வகித்து வரும் 80 தனிமைப்படுத்தல் மையங்களில் 8029 நபர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (07) திகதிக்குள் நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 1280 ஆகும். இதுவரை நாடாளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 308,989.ஆகும்.

பூரணமாக குணமடைந்த 08 கொவிட்- 19 தொற்றாளர்கள் இன்று (08) காலை 6.00 மணியளவில் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தவர்களாகும்.

கந்தகாடு மற்றும் சேனபுர போதைப்பொருள் அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 650 ஆக உள்ளது. (நிறைவு) Buy Sneakers | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta